All content for utnb பெளத்திக் is the property of utnb பெளத்திக் and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
இந்த நூல்...
டாக்டர்ஜி ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் உறுதிபூண்டு, தனிமனிதனாகவே ஆர்.எஸ்.எஸ் ஸைத் துவக்கினார். பிற இயக்கங்களுக்கு இல்லாத விசேஷத் தன்மையுடன் சங்கம் தழைத்து வளர்ந்தது. அதுதான் மனி தர்களை உருவாக்கும் தன்மை. டாக்டர்ஜி உருவாக்கிய மாமனிதர்கள் எத்தனையோ பேர். சமுதாய நிர்மாணப் பணியில் அதே வழியில் சென்று, கணக்கற்ற தியாகங்கள் புரிந்து, எண்ணற்ற ஸ்வயம்சேவகர்களைத் தயார் செய்த வர்களில் ஒருவர் மாதவராவ்ஜி முளே.
அவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். பாரதம் பிளக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டபோது ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டு, வட்சக்கணக் கான ஹிந்துக்கள் அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்ட போது பஞ்சாபில் சங்கத்தை வழிநடத்திச் செல்லும் சிக்கலான பணியை அவர் சிரமேற் கொண்டார்.
அதுபோலவே, சுதந்திர பாரதம் ஒரு சர்வாதிகாரியால் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட காலமாகிய அவசர நிலை யின்போது, சங்கத்தில் அகில பாரத அதிகாரியாகப் பொறுப்பு வகித்த அவரது சேவை ஈடிணையற்றது.
தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் அவரது வாழ்வும் பணியும் ஒவ்வொரு தேசபக்தரின் உள்ளத்தையும் ஊக்குவிக்கும் வல்லமை படைத்தது என்ற எண்ணத்தில் இந்நூலை வெளியிடுகிறோம். தேசபக்தர்கள் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். - பதிப்பகத்தார்.