All content for utnb பெளத்திக் is the property of utnb பெளத்திக் and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
“ஆர்.எஸ்.எஸ் குறிக்கோள் செயல்முறைகள்“ -பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்
utnb பெளத்திக்
2 hours 14 minutes 4 seconds
4 years ago
“ஆர்.எஸ்.எஸ் குறிக்கோள் செயல்முறைகள்“ -பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்
“ஆர்.எஸ்.எஸ்
குறிக்கோள் செயல்முறைகள்“
-பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்
இந்த நூல்...
குருஷேத்திரம் மகாபாரதப் போர் நடந்த இடம். போர் தொடங்குவதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசம் செய்த இடம். இந்தப் புண்ணியத் ஸ்தலத்தில் 1965-ம் ஆண்டு சங்க காரியகர்த்தர்களின் மத்தியில் அப்போது சங்கத்தின் சர்கார்யவாஹ் பொறுப்பில் இருந்து வழிகாட்டி வந்த பரமபூஜனீய பாளாசாகேப் தேவரஸ் அவர் ஆற்றிய ஆறு சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த தூல்.
சங்கத்தின் இலட்சியத்தின் இறுதி வடிவம்தான் என்ன? எதைச் செய்தால் அந்த இலட்சியம் நிறைவேறும்? இது போன்ற கேள்விகள் இயல்பாகவே சங்க காரிய கர்த்தர்களின் மனதில் எழுகின்றன.
மேலும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பலவிதமான இடர்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரலாம். அவற்றால் மனம் வேதனைப்படுகிறது. இது இயற்கையானதே. இது போன்ற நேரத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
இத்தகைய எண்ணங்கள் மனதைக் குழுப்பமடையச் செய்கின்றன. மனம் சோர்வடைகிறது. வேலையில் ஊக்கம் குறைகிறது. போர்க்களத்தில் மனம் மயங்கிய பார்த்தனைப் போல் பளிக்களத்தில் சிந்தை கலங்கி, திகைத்து போய் நின்று விடுகிறார்கள்.
பார்த்தனுக்கு கிருஷ்ணன் கீதை மூலம் வழிகாட்டியது போல. பரமபூஜனிய பாளாசாகேப் தேவரஸ் அவர்கள் இந்த நூலில் காரியகர்த்தர்களுக்கு வழிகாட்டுகிறார். அந்த வகையில் இந்த பேருரை குருக்ஷேத்திரத்தில் நிகழ்த்தப்பட்டது மிகவும் பொருத்தமானதே.
அப்போது அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. சங்க காரியகர்த்தர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
-பதிப்பகத்தார்.