
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் Vs எதிர்கட்சி தலைவர் எடப்பாடி க. பழனிசாமி இடையே காரசாரமான விவாதம். 'கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் துயரத்துக்கு காரணம்' என்கிற வகையில் விளக்கம் கொடுப்பதாக இருந்தது மு.க ஸ்டாலின் பேச்சு. 'போதிய பாதுகாப்பு தரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என விமர்சித்தார் எடப்பாடி. கரூரில் தொடங்கி கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி என விவாதங்கள் நீண்டது.
இன்னொரு பக்கம், 'தவெக கொல்லும். நீதி வெல்லும்' என விஜயை, கடுமையாக அட்டாக் செய்துள்ளது முரசொலி.
பாஜகவோடு பிராண்ட் செய்வதன் மூலம், திமுக சிலவற்றை அறுவடை செய்ய நினைக்கின்றனர். விஜய்க்கு ஆதரவான குரலின் மூலம், எடப்பாடி சில லாபக்கணக்குகள் போடுகிறார்.