
திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். சேகர் பாபு மூலமாக திமுகவில் இணைந்தார் என்கிறார்கள். அடுத்து வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கப்படுகிறது என்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக். மனோஜ் பாண்டியன் இணைந்ததற்கு பின்னணியில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பும் காரணம் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ்ஸின் செயல்பாடு உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளது. இன்னொரு பக்கம், மீண்டும் துணை பொது செயலாளர் ஆகியிருக்கும் பொன்முடி. அடுத்து அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதனும் துணை பொது செயலாளர் ஆகியுள்ளார். இதற்கு பின்னணியில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாய வாக்குகளை குறி வைக்கும் அரசியல் உள்ளது. இன்னொரு பக்கம் மனோஜ் பாண்டியன் உள்ளே வந்தது, தென் மாவட்ட திமுகவுக்குள் சில சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. அதன் பொறுப்பாளரான கனிமொழி, கவனத்தோடு கையாளத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் கார் தாக்குதலுக்கு உள்ளானது. 'அட்டாக் செய்தது அன்புமணி டீம்' என்கிறார். என்ன நடக்கிறது?