
ஊணியதோர் ஓங்காரம் மேலுமுண்டே
உத்தமனே சீருண்டே யூணிப்பாரே
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்
ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கிநிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சுவீடே
ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப்பாரு
தோணிபோற் காணுமடா அந்தவீடு
சொல்லாதே ஒருவருக்குந்துரந்திட்டேனே.
அகத்தியர் பாடல்