
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா எனும் பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் தமிழ் ரசிகர்களின் உணர்வுகளோடு கடந்துவிட்டது இவரது நாதம். காதல், நட்பு, பகை துரோகம், ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் இவரது இசை தலைமுறைகளைத் தாண்டி கடத்திக் கொண்டே இருக்கிறது.