All content for kandathai chollugiren is the property of JBenedict and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
திடீரென ஒரு ஐம்பது அறுபது நாட்களுக்கு முன், ‘பேட்டை’ படிக்க வேண்டுமென ஏன் தோன்றியது? படிக்கத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே பிரபாவின் பழைய காணொளியை எது பார்க்க வைத்தது?‘சார்பட்டா’ வெளியாகும் சமயத்தில் இதெல்லாம் எனக்கு எப்படி நேர்ந்தது, எது நிகழ வைத்தது?ஒருவேளை, சில மாதங்களுக்கு முன் எதேட்சையாக நான் பார்த்த பிரபாவின் நேர்காணல்களில் இருந்த நேர்த்திதான் காரணமா?பேட்டை பற்றி சிறு குறிப்பு வரைக; இதற்கான பதிலுடன் புத்தகம் தொடங்குகிறது. அதன் நீட்சியாக பயணிக்கிற நாவல், ரூபன் பிறப்பிற்கு முன்னிருந்து ரூபனின் 25-30 வயது வரை செல்கிறது. எவ்வளவு முயன்றும், என் ரூபனுக்கு தமிழ்ப்பிரபாவின் முக ஜாடை வருவதை தவிர்க்க முடியவில்லை. ரூபன் இவாஞ்சலின் ரெஜினா குணசீலன் பாலு ஆமோஸ் சைலேந்தர் விஷால் நகோமியம்மா கிளியாம்பாள் லாரன்ஸ் இன்னும் இன்னும் கதாபாத்திரங்கள். CRIME AND PUNISHMENT-க்கு பிறகு நான் ரசித்து படித்த நாவல் இது. அத்தனை கதாபாத்திரங்களுக்கும் கதை உண்டு; எல்லாரும் ஒரு வினை ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட சோர்ந்து கீழே நான் வைக்காததிற்கு காரணம்; இது கருவாடல்ல; உயிரோடு துள்ளிக்கொண்டே முகத்தில் நீரை வாரியடிக்கும் துடிப்பான மீன்; அத்தனை ஜீவனோடு இருக்கிறது.எவ்வளவு முயன்றும் என்னால் எழுத முடியவில்லை; காரணம் இதைப் பற்றி சிலாகித்துப் பேசுவதற்கு அத்தனை இருக்கிறது. இருந்தாலும், முடிந்தவரை சுருங்க சொல்ல முயற்சித்திருக்கிறேன்.