சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
All content for Kadhaiya Kavithaiya is the property of Kadhaiya Kavithaiya and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
Instagram: @kadhaiyakavithaiya
பட்டாம்பூச்சி:
அழகான பட்டாம்பூச்சி, வரப்பு ஓரம் பறந்து தெரிந்ததாம்
எவ்வித கட்டுப்பாடும் இல்லை எவ்வித கலக்கமும் இல்லை
தன் வட்ட வாழ்க்கையில் தைரியமாய் தான் இருந்ததாம்
தெருவோரம் ஓடிச்சென்ற சிறுவன் ஏனோ வரப்பின் ஓரம் வந்தானாம்
தூரம் இருந்து பலவற்றை ரசித்திருந்தாலும்
தன்னோடு இந்த பட்டாம்பூச்சியை வைத்துக்கொள்ள ஆசை பட்டானாம்
முதல் பார்வையிலேயே அதன் மேல் ஆசை வர
பிடிக்க முயன்று தோற்றே போனானாம்
பின்ன என்ன, தினமும் வரப்புக்கே வந்தவன்
அந்த பட்டாம்பூச்சி எங்கெங்கு பறக்கும்? எந்த பூவின் வாசம் அழைக்கும் என
பொறுத்திருந்தே பார்த்தானாம்
இவன் இருப்பை அறிந்த பட்டாம்பூச்சியும் முதல் சில நாள் யோசித்தாலும்
இவன் தீங்கு செய்யவில்லை என்பதால் தன் வேலையை தொடர்ந்ததாம்
ஆனால் இந்த சிறுவனோ தக்க நேரத்திற்கு காத்திருக்கிறான் என்று அறியாமல்
மெல்ல அவனின் செய்கையில் மயங்கியதாம்
தான் எடுத்த தேனை ஜீரணித்து கொண்டே இவன் வரவையும் அறிந்ததாம் அந்த பட்டாம்பூச்சி
நேரமும் வந்தது போல அந்த சிறுவனுக்கு
பட்டாம்பூச்சியை முழுதாய் ரசித்திட ஒரு கண்ணாடி பாட்டிலில்
அருமையான ரோஜா பூவை ஏந்தினானாம்
இவன் மேல் இருந்த நம்பிக்கையும் பூவின் வாசமும் பட்டாம்பூச்சியை அழைக்க
மெல்ல வந்து அமர்ந்ததாம்
நொடிக்காக காத்திருந்தவன் பட்டாம்பூச்சி சிறகை விரிக்கும் முன்பே
சட்டெனெ அடைத்தானாம்
தான் ஏமாந்ததை உணர நினைக்கும் முன்னமே
அந்த பட்டாம்பூச்சியின் இடம் முதல் அதன் வட்டாரத்தை விட்டு விலக்கி
தனியே எடுத்து சென்றானாம் அந்த சிறுவன்
அதன் அழகில் மயங்கிய சிறுவனும்
தினமும் பத்திரமாக பாதுகாத்தானாம் ஒரு கூண்டுக்குள் வைத்து
பாவம் இவன் மேல் இருந்த நன்மதிப்பால் இவன் முன்னால் மட்டும் சந்தோசமாய்
சிறகடித்ததாம் பட்டாம்பூச்சி
எத்தனை நாள் தான் கூண்டுக்குளையே இருக்க?
மெல்ல வெளிய வர பட்டாம்பூச்சி முற்பட அப்பொழுது தான் தெரிந்ததாம்
அந்த சிறுவனின் மறுபக்கம்
கூண்டில் இருந்த வரை ரசித்த சிறுவன்
வெளி வர முயன்ற பட்டாம்பூச்சி சிறகை மெல்ல நெரித்தானம்
அவன் அழுத்தம் தாங்காத பட்டாம்பூச்சியும்
அவனிடம் சரணடைந்தே போனதாம்
மீண்டும் கூண்டுக்குள் அடைத்தாலும்
மெல்ல மெல்ல அந்த பட்டாம்பூச்சியை துன்புறுத்த ஆரம்பித்தானாம்
அந்த சிறுவன்
எவ்வளவு நாட்கள் தான் வலிகள் பொறுக்க?
அதிகாலை நேரம் வந்த சிறுவன்
அதின் இறக்கையை பிடித்து மேலே தூக்க
இது வரை வலிகள் தாங்கிய பட்டாம்பூச்சியும்
தனது பின் இறக்கைகளை உதிர்த்தே பறந்ததாம்
மீண்டும் ஓடினான்னாம் அந்த சிறுவன்
அவன் கைகள் காற்றோடு ஊசலாடியதாம்
சற்று சிரமம் இருந்தாலும் உயரத்தை நோக்கி பரந்த பட்டாம்பூச்சி
அவன் கைகள் படாத உயரம் பறக்க
தலை குனிந்தே போனானாம் நிமிர்ந்து பார்த்தே...
Written: Sam
Read: Nancy
Kadhaiya Kavithaiya
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.