சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
All content for Kadhaiya Kavithaiya is the property of Kadhaiya Kavithaiya and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
எந்த ஒரு நீண்ட கால நட்பும்
ஏதோ சிறு புள்ளியில் தான் துவக்கம்
சந்திக்கும் எல்லா மனிதருளும்
இது பெரிதாய் தோன்றிடாது...
மெல்ல அது தோன்றி
பல யுகங்கள் வாழ்ந்த வாழ்வினை
ஒவ்வொரு நட்பும் பெற்றிருக்கும்
சந்தோசமோ கோபமோ
துக்கமோ கண்ணீரோ
பெரிதாய் வெளி உலகுக்கு தெரிந்திடாத அத்தனை ரகசியமும்
அவர்களுக்கு உருவாக்கப்பட்ட உலகில் பேசு பொருளாயிருக்கும்
முதல் காதல் தோன்றினாலும்
மூன்றாம் காதல் தோன்றினாலும்
அவர்களின் யோசனையும் இருக்கும்
அவர்களின் கேலிக் கிண்டல்களும் இருக்கும்
ஈருருளியில் மூவர் பயணித்தலும்
பேச வார்த்தைகளின்றியும் ஒன்றாய் நேரம் செலவிடுதலும்
நெடுந்தூர பயணத்தில் தேநீர் பருகுதலும்
இரவுநேர வசவுகளில் இருவரியில் வந்து செல்லுதலும்
இவர்களின் அன்றாட செய்கைகள்
சண்டைகள் சில நொடி தோன்றினாலும்
வெளிப்புறம் விட்டு கொடுத்துதல் இல்லை
ரத்தம் சொட்டும் அளவு விளையாடினாலும்
கோபங்கள் வருவதும் இல்லை
கால்கள் தலைமேல் பட்டாலும்
பின்னிப்பிணைந்த உறக்கம் கொண்டாட்டம் தான்
நல்லதோ கெட்டதோ
நண்பர்களிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு தான்
ஆயிரம் நண்பர்கள் இருப்பதாய் காட்டுபவர்களும்
தேர்ந்தெடுத்த குறுகிய வட்டம் கொண்டவர்கள் தான்
ஒன்றாய் இருப்பதால் அருமைகள் மறைக்கப்பட்டிருக்கலாம்
சிறு தூரம் சொல்லிவிடும்
அவர்களின் கலாய்சொற்களின் பின்னிருக்கும் அன்பினை...
Kadhaiya Kavithaiya
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.