சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
All content for Kadhaiya Kavithaiya is the property of Kadhaiya Kavithaiya and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.
தெருவெல்லாம் தேவதைகள் என்று
கண் விழும் மங்கைகள் யாவரையும்
கடைக்கண்ணால் ரசித்து விட்டு
கடந்திடும் சராசரி ஆடவன் நானடி
முதல் பார்வை முதல் காதல் என்று
சகாக்கள் சொல்ல கேட்டபோதிலும்
கேலி கிண்டல் செய்து விட்டு
காதல் போதை தெரியாத வயதுவந்த சிறுவன் நானடி
உடலென்ன மனம்மென்ன என்று
ஆராய்ச்சி ஏதும் செய்யாமல்
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அறியாமல்
கண்மூடித்தனமாய் சுற்றி திரியும் மன்னன் நானடி
எதேச்சையாய் என் கண்முன் தோன்றி
பார்த்த நொடியிலேயே எனை நீ சிறைபிடித்தாய்
மறுபடி மறுபடி உனை நான் பார்த்திட
எந்தன் அட்ரலினையும் சுரக்க செய்தாய்
இதற்கு காதல் என்றொரு பெயரை
நானும் வைத்து கொள்ள
உன் நாணம் நானும் பார்க்கையிலே
இறக்கை கட்டி மேகம் தொட பறக்கிறேன்
தடுமாறாமல் பேசும் நாவும்
என்னைப் போலவே உன்னிடம் தடுமாற
பழகிய வார்த்தைகளும் என் கை விரல் போல
நடுநடுங்கி தான் போனது உன் மையிட்ட கண்கள் பார்த்து
தனியாய் நடந்த என் பாதங்களும்
உன் அன்னநடையுடன் ஒத்திசைவு பெறுகிறது
நடுங்கும் என் விரல்களை நீ பற்றுகையிலே
இதயம் சில நொடி வலுவிழக்கிறது
காதல் இது தான் என்று
என் வாழ்வில் நான் ஏற்கும் முன்னமே
என்னோடு முழுதாய் நீ கலந்து
என் ஆசையிலும் என் ஆயுளிளும்
என் மூச்சிலும் என் பேச்சிலும்
என் நடையிலும் என் உணர்விலும்
பிரிக்க இயலாத அனிச்சை செயலாய்
மூளையில் பதிந்து விட்டாய்
சில நொடியில் நான் செய்த மூடத்தனத்தினால்
உன் ஆயுள் முழுதும் எனை நீ வெறுக்க
மீண்டும் உன்னோடு கைவிரல் கோர்ப்பது
நிதர்சனத்தில் சாத்தியமில்லா கூறுகள் என
நரம்பு திசுக்களால் ஆன இந்த மூளை கூப்பாடு போட்டாலும்
சில நேரம் என்னை சமாதானம் செய்ய
மாயத்தோற்றமும் தருகிறது நீ இல்லை என்பதை மறைக்க...
Kadhaiya Kavithaiya
சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.