பாடல் : 22
அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம்,
பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில்,
இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே,
முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே.
பாடல் : 23
உத்தம வெளுப்புச் செம்மை உரைத்திடும் கறுப்பும் ஆகும்,
சத்துவ குணத்தி னோடு ரசோகுணம் தமோகு ணந்தான்,
சுத்தமோ டழுக்கி ருட்டாச் சொல்லுமுக் குணமும் மூன்றாய்,
ஒத்துள வேனும் தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே.
பாடல்:24
ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர்,
மருவும் அவ் வியத்தம் தானே மகத்தத்வம் ஆகும் அந்த,
அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும்,
கரு அகங்காரம் மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும்
பாடல் :25
இக்குணங் களிலே விண்போன் றிருக்கும்சிற் சாயை தோன்றும்,
முக்குணங் களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும்,
அக்குணப் பிரமச் சாயை அந்தரி யாமி மாயை,
எக்குணங் களும்பற் றாதோன் நிமித்தகா ரணனாம் ஈசன்.
பாடல் : 26
ஈசனுக் கிதுசு ழுத்தி இதுவேகா ரணச ரீரம்,
கோசம்ஆ நந்தம் ஆகும் குணம் இராசதம் அ வித்தை,
தேசறும் அவித்தை தோறும் சிற்சாயை சீவ கோடி,
நாசமாம் உயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞன் ஆமே.
Show more...